tamilnadu

img

மணல் கடத்தலின் போது மண் சரிந்து இளைஞர் உயிரிழப்பு

ஆரணி அருகே மணல் கடத்தலின் போது மண் சரிந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையத்தை சேர்ந்த சுதாகர் என்பவரின் டிராக்டரில் அனுமதியின்றி நள்ளிரவில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த பிரேம் என்ற இளைஞர் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மணல் சரிந்ததில் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பிரேம் அதே இடத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணம்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்திமலைப்பட்டி ஏரியில் ஏற்கனவே மணல்கடத்திலின் போது ஒருவர் உயிரிழந்தார். ஆனால் அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் தற்போது மேலும் ஒரு இளைஞர் உயிரிழக்கும் சூழல் உருவாகி உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.