tamilnadu

img

இளம் சிறார்கள் கனவு உலகில் வலம் வர வேண்டும் உலக திரைப்பட விழாவில் ஆட்சியர் பேச்சு

திருவண்ணாமலை, அக். 17- தேசத்தில், பொதுவுடமை ஆட்சியும், பொதுமக்களுக்கான சினிமாவும் அவசியமானது என உலக திரைப்பட விழாவில் இயக்குநர் கோபி நயினார் பேசி னார்.  திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், உலக திரைப்பட விழா  நடைபெற்று வருகிறது. இந்த  விழாவை துவக்கி வைத்த  மாவட்ட ஆட்சியர் க.சு.கந்த சாமி, “தரமான பொருட்கள் மக்க ளுக்கு சென்றடைய விளம்ப ரங்கள் அவசியமாவது போல, அர சின் நலத் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய, மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டி யுள்ளது. உலகத்தரமான திரைப் படங்களை இந்த திரைப்பட விழா வில் திரையிடுவதன் மூலம், மக்க ளின் சிந்தனை திறனை மேம்ப டுத்த உதவிடும், இந்த நல்ல சிந்தனைகளின் மூலமாக, வளர் இளம் சிறார்கள், கனவு உலகில் வலம்வர வேண்டும், அந்த கனவு  அவர்களின் வாழ்விற்கு வெற் றியை தரும்”என்றார். ஒருங்கிணைப்பாளர் களப்  பிரன் பேசியபோது, உலக திரைப்  பட விழாவிற்கு பொருத்தமான நகரம் திருவண்ணாமலை. இங்கு, 1979 ஆம் ஆண்டு முற்  போக்கு இயக்கத்தினர் வானவில்  என்ற திரைப்பட சங்கத்தை துவக்கி, நல்ல திரைப்படங்களை மக்களுக்கு கொண்டு சென்ற தாக தெரிவித்தார்.  அறம் திரைப்பட இயக்குநர் கோபிநயினார் பேசியபோது, மக்கள் வளமுடன் வாழ, பொது வுடமை ஆட்சி அவசியம். அதே போல் மக்கள் மனங்கள் வளமு டன் திகழ, விளிம்பு நிலை மக்கள்  பங்களிப்புடனான, மக்கள் சினிமா  அவசியம் என்றார்.  தமுஎகச மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். கருணா பேசிய போது, திரைப்பட ரசிகர் கள் நிறைந்த, திருவண்ணாமலை நகரத்தில் குறுகிய நேரத்தில், திட்டமிட்டு இந்த உலக திரைப்பட விழா நடத்தப்படுகிறது. விழாவை துவக்கி வைத்துள்ள மாவட்ட ஆட்சியர், மக்கள்  ஆட்சியராகவும், மாணவ,  மாணவிகளுக்கு தன்னம்பி கையை தரும், ஆட்சியராகவும் செயல்படுவது பாராட்டுக்குரியது என்றார். திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார் பேசுகையில், நல்ல பல சினிமாக்களை பார்த்து மக்கள் மனம் பண்பட்டி ருந்தது. ஆனால், தற்போது நல்ல  படங்கள் வருவதும் குறைந்து விட்டது. நல்ல சினிமாவை மக்கள்  உள்வாங்கிக் கொள்ள வேண்டும், எழுத்தாளர், இயக்கு நர், நடிகர்களின் ரசவாதமே, நல்ல சினிமாவை உருவாக்கும். சினிமாவின் வீழ்ச்சி என்பது உள்ளத்தின் வீழ்ச்சியாகும் என தெரிவித்தார்.