திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டில் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து விவசய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றியச் செயலாளர் ஜெயராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பிரகலநாதன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் என்.வெங்கடேசன், சிபிஎம் ஒன்றியச் செயலளர் எஸ்.ராமதாஸ், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*************
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.வீரபத்திரன், ஏ.லட்சுமணன், எ.நடராஜன் (சிபிஎம்), முத்தையன், தங்கராஜ் (சிபிஐ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.