tamilnadu

img

அரசு பேருந்தில் உயிரிழந்த தொழிலாளி

திருவண்ணாமலை, மார்ச் 2- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் குலால்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மில்டன்  மகன் ஆலிவர் (50). இவரது மனைவி வேதமணி.  திருவண்ணாமலையில் உள்ள ஒரு மளிகைக் கடை யில் ஆலிவர் வேலை செய்து  வந்தார்.  வேலை நேரம் முடிந்து தினசரி அரசு நகரப் பேருந்தில் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன் படி திங்களன்று வேலைக்கு வந்த ஆலிவர் வேலை முடிந்து அரசுப் பேருந்தில் ஏறியவர் திடீரென  உயிரி ழந்தார். இதுகுறித்து தகவல றிந்த காவல்துறையினர் ஆலி வரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலி வர் மரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.