tamilnadu

img

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக.10- திருவண்ணாமலை மாவட்டம் நரியாப்பட்டு கிரா மம் மற்றும் சுற்றுவட்டார கிரா மங்களில் அதிகளவில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரி வித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட  ஆட்சியரிடம் கிராம மக்கள்  திங்களன்று (ஆக.10) மனு  அளித்தனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:  திருவண்ணாமலை அடுத்த நரியப்பட்டு கிரா மத்தில், கடந்த 2003ஆம் ஆண்டு முதல், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வந்தது.  இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு அரசு மது பானக்கடை கட்டிடம் பழு தானதால் அங்கிருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.  மதுபானக்கடை மூடப்பட்ட தால் சுற்று வட்டார கிராமங்க ளில் அதிகளவில் கள்ளச் சாராயம் விற்பனை நடக்கத் துவங்கியது. கிராமப் பகுதிகளில் மது  அருந்துபவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, கள்ளச் சாராயம் சாப்பிட்டு  வருவதாகவும், அந்த கள்ளச் சாராயத்தை விற்ப னையினால்  அருந்துபவர்க ளின் உடல் நலம் பாதிக் கப்படுகிறது. எனவே, கள்ள சந்தை யில் சாராயம் விற்பனையை தடுக்கும் வகையில், நரி யாப்பட்டு கிராமத்தில் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.