தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் 8 பேர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.