கொள்ளையர்கள் 5 பேர் கைது
திருவண்ணாமலை,செப். 28- திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைகளில் கொள்ளையடித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த லாரியிலிருந்து இறங்கிய மர்மந பர்கள் சிலர் அவரை வழிமறித்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர் கலசபாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கலசபாக்கத்தில் 2 லாரிகளில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கோட்டீஸ்வரர் (44), சின்னராஜ் (34), விஜயகுமார் (35), ரியாஸ் (39), கோவையை சேர்ந்த பொன்ராஜ் (48) என்பது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் நின்றுகொண்டிருந்கும் சரக்கு வாகனங்களில் இருக்கும் பொருட்களை கொள்ளைய டித்தது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு
திருவண்ணாமலை,செப்.28-திருவண்ணாமலை மாவட்டத்தில், வேளாண் துறை, பொதுப்பணித்துறையின் கட்டடம் மற்றும் பாசனம், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டு குழுத் தலைவர் தோப்பு.வெங்கடாசலம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் வேளாண் துறை, பொதுப்பணித்துறை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். திருவண்ணாமலையில் ஈசான்ய லிங்கம் அருகே, ரூ. 28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் கட்டடத்தை சட்டமன்ற குழு ஆய்வு செய்யதது. மேலும் ஊசாம்பாடி கிராமத்தில் பசுமைக்குடில் பூந்தோட்டம், பெரிய கல்லப்பாடி கிராமத்தில் சொட்டு நீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.