tamilnadu

img

திருக்குறள் எழுதும் விழா

திருவண்ணாமலை, ஆக.5- திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், திருக்குறள் எழுதும் விழா வேங்கிக்காலில் நடைபெற்றது. விழாவுக்கு, தொண்டு மையப் பொருளாளர் ஜீவா தலைமை தாங்கினார். ப.குப்பன் வரவேற்றார்.   உலக தமிழ் கழகத்தின் மாநில தணிக்கை  யாளர் காஞ்சிபுரம் தனியவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்குறள் எழுதும் விழாவின் 5 ஆவது சுற்றின் 45 ஆவது குறளையும், அதற்கான பொருளையும் எழுதினார். விழாவில், திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணி உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.