புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் அனைவருக்கும் தரமான இலவச கல்வி கிடைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகே தெரு முனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் எம். ரவி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், பெ.கண்ணன், லட்சுமணன் என். வெங்கடேசன்,அன்பரசன், ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.