tamilnadu

img

சுடுகாட்டை மீட்க போராட்டம்

திருவண்ணாமலை, ஆக. 22- திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையிலுள்ள தேனி மலைப் பகுதி மக்கள்  பயன்படுத்திவந்த சுடுகாட்டை மீட்க வேண்டி  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நகரம், தேனி மலைப்  பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 100  ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சுடு காட்டை,  தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து  உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர்.   கடந்த சில தினங்களாக முன்பு அந்த நபர்கள், காவல்துறை பாதுகாப்புடன் வேலி அமைப்பதை கண்டித்து தேனி மலைப் பகுதி யில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  தகவலறிந்து வந்த திருவண்ணாமலை நகர காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு அதிகாரி களிடம் பேசி உரிய விசாரணை நடத்தி, நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். பிறகு, கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.