குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திருவண்ணாமலை அண்ணாசிலை முன்பு புதனன்று (மார்ச் 18) சிறைநிறப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் காதர் ஷரீப் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்டச் செயலாளர் முஹம்மத் ரியாஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.