திருச்சி, அக். 28- ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க இதுவரை கருவி கண்டுபிடிக்கப்படாதது அறிவியலுக்கான சவால் என்று திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடு காட்டுப்பட்டியில், பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி கடந்த நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க நடைபெறும் பணிகளை பார்வை யிட நடுகாட்டுப் பட்டிக்கு வருகை தந்த திருமாவள வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தை சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரின் விருப்பம். ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க இதுவரை கருவி கண்டுபிடிக்கப்படாதது அறிவிய லுக்கான சவால். இந்தப் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக குரல் எழுப்பு வோம். குழந்தையை மீட்க அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன; இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.