தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், திருவண்ணாமலை கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. என்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டலச் செயலாளர் பி.குமாரசாமி, கவுரவத் தலைவர் வெ.மன்னார், மாவட்டச் செயலாளர் கு.நீதிமாணிக்கம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.