tamilnadu

img

வருமானத்தை இழந்த குடும்பம் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கொரோனாவால் வருமானம் இழந்த  பிரச்சனை காரணமாக, தாய் தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்றுள்ளார்.ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி முனீஸ்வரி (30) இவர்களுக்கு பிரகாஷ்ராஜ் (10) என்ற மகனும், ஷாலினி(9), தேஜாஸ்ரீ ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.ராஜீவ்காந்தி சென்னையில் பழக்கடை நடத்தி வந்தார். அங்கேயே குடும்பத் துடன் வசித்து வந்தனர். கொரோனா பொது முடக்கம் காரணமாகச் சொந்த ஊரான ஆகாரம் கிராமத்துக்கு வந்தனர்.

பின்னர், வருமானமின்றி தம்பதியிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், ஞாயிறன்று மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள் ளது.  இதில் மனைவி முனீஸ் வரியை தெருவில் இழுத்து ராஜீவ்காந்தி தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த முனீஸ் வரி திங்கள்கிழமை காலை தன் குழந்தைகள் 3 பேருக்கு விஷத்தைக் கொடுத்து, தானும் விஷம் குடித்து  தற் கொலைக்கு முயற்சி செய்தார்இதனால் 4 பேரும் மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறை  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;