திருவண்ணாமலை, ஜுன் 21- திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு பயி ரிட்டு வறட்சியால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கடும் வறட்சி காரண மாக போதிய தண்ணீர் இல்லாமல் கரும்பு முற்றிலு மாக கருகி விட்டது. இத னால் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மேலும் கரும்பு விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு பதிவும் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் உடனடியாக வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளியன்று (ஜூன் 21) சங்க நிர்வாகி எஸ். பலராமன் தலைமையில் விவ சாயிகள் மனு அளித்தனர்.