திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள சீலப்பந்தல் கிராமத்தின் சாலையோர கால்வாய்கள் தூர்ந்துள்ளன. உடனடியாக கால்வாய்களை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கிராம மக்கள் துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.