குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மஹல்லா மற்றும் ஜமாஅத் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (பிப்.19) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், சிபிஐ மாவட்ட நிர்வாகி இரா.தங்கராஜ், காங்கிரஸ், விசிக, இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.