tamilnadu

img

பால் கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை, ஜூலை 27- திருவண்ணாமலையில் பால் உற்பத்தி யாளர்களிடம், பால் கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும்  பால் உற்பத்தியில் அதிக அளவில் மாவட்ட  மக்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், முழுமை யாக பால் கொள்முதல் செய்யாமல் பாதி அளவு பாலை மட்டுமே ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வந்தது. கடந்த வாரம் 3 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய் யப்பட்டது. கடந்த சில நாட்களாக அந்த 3 லிட்டர் பாலை யும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்ய வில்லை. இதனால் கொரோனா பொது முடக்கத்தால் வறுமையில் வாடும் விவசாயி கள், பால் உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் விவ சாயிகளும், பால் உற்பத்தியார்களும் திரு வண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள மாவட்ட கூட்டறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய அலுவலகத்தை விவசாயிகள் தமிழ்  நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரஜினி ஏழுமலை தலைமையில் முற்றுகையிட்டனர்.