திருவண்ணாமலை, ஜன. 28- சுகாதாரத்துறையில் கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்தக் கோரி கிராம சுகாதார செவி லியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் முறையீடு போராட்டத்திற்கு நிர்வாகிகள் கௌசல்யா, விஜயகுமாரி, அம்பிகா ஆகி யோர் தலைமை தாங்கினர். செல்வி துவக்க உரையாற்றினார். கோரிக்கையினை விளக்கி கிராம சுகாதார செவிலியர் புனிதா உரை யாற்றினார். செல்வி, ஜெயசீலன், ரமேஷ், கண்ணா கனகவல்லி, நாகராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கட லூர், திருப்பத்தூர், திருவாரூர், விழுப்புரம் என்று அனைத்து மாவட்டங்களிலும், சுகாதார செவிலியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள குற்றக் குறிப்பாணைகள், தற்காலிக பணி யிடை நீக்கம், போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில் உள்ள குளறு படிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், மகப்பேறு இறப்புக்கு கிராம சுகாதார செவி லியரை மட்டும் பொறுப்பாக்குவதை தவிர்த்து, அதற்கான ஆவணங்களை வட்டார அலுவலகங்களுக்கு அனுப்பி பெறவேண் டும், கிராம சுகாதார செவிலியர்களின் அனைத்து காலிப் பணியிடங்களையும் வரை யறை இன்றி நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் உரையாற்றினர்.