tamilnadu

ரூ. 27 ஆயிரத்திற்கு கரும்பு வெட்டிய கொத்தடிமைகள் மீட்பு!

 திருவண்ணாமலை,9- திருவண்ணாலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ரெட்டியாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருளர் இனத்தை சார்ந்த முருகன்(45). இவரது மனைவி செல்வி (40), மகன் முனியப்பன் (20) ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்பாக ரூ.27,000 முன் பணமாக பெற்றுக்கொண்டு இடைத்தரகர் மூலமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கெங்கம்பட்டி பகுதியில் கரும்பு வெட்டும் பணிக்கு சென்றுள்ளனர். ஒரு வருடம் வேலை செய்த பின்னரும் அவர்கள் பெற்ற பணத்தில் ரூ.9000 மட்டும் கழிந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர்கள் அதிக நேரம் பணி செய்ய வேண்டும் என்பதற்காக மது அருந்தவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், இவர்கள் வேலை செய்த இடத்தில் இருந்து கடந்த மே மாதம் தப்பித்து வந்தனர். ஆனாலும் இவர்களை வேலைக்கு அனுப்பிய ஒப்பந்ததாரர் ஆட்களுடன் வந்து மீதம் செலுத்த வேண்டிய தொகைக்காக, முருகனை, மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து முருகனின் மகன் முனியப்பன் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து, தனது தந்தையை மீட்டுத் தருமாறு கோரிக்கை மனு அளித்தார். இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக் கையால், முருகன் மீட்கப்பட்டார். மேலும், அவரது குடும்பத் தினருக்கு வந்தவாசி வட்டம், மீசநல்லூர் கிராமத்தில் ரூ.2,60.000 மதிப்பில் ஒரு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.