திருவண்ணாமலை, ஆக. 25- திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத் திற்கு, தமிழகம் முழுவதும் அவருடன் பணியில் சேர்ந்த வர்கள் டெலிகிராம், வாட்ஸ்அப் குழு மூலம் நிதி சேகரித்து 13 லட்சம் வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜமுனாமரத்தூர் அடுத்த வீரப்பனூர் ஊராட்சி வெள்ளிதாதான்கொட்டாய் மலை கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர், கடந்த 2013ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் காவலர் குடியிருப்புக்கு சென்று கொண்டிருக்கும் போது, நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள், வான்பிரியா, ஜெய சீலன், அன்புசெல்வன் ஆகியோர் தமிழகம் முழுவதும் 2013ஆம் ஆண்டு காவல் துறையில் தங்களுடன் பணி யில் சேர்ந்த காவலர்களிடம் உயிரிழந்த அண்ணாதுரை குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குமாறு டெலிகிராம், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அனைவரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கினர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட 13 லட்ச ரூபாயை அண்ணாதுரையின் பெற்றோர், மனைவி ஆகியோரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.