tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க கோரிக்கை

தி.மலை, செப். 8- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவண்ணா மலை மாவட்ட 13ஆவது மாநாடு மாவட்டத் தலை வர் இரா.ஜோதிசங்கர் தலைமையில் சனிக்கிழமை (செப். 8) நடைபெற்றது. துணைத்தலைவர் கோ.ஸ்ரீதரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மு.அன்பரசு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் மு.பாஸ்க ரன் வேலை அறிக்கையை யும், பொருளாளர் கே.அண்ணாதுரை வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஆசிரியர் கூட்டணி சி.அ.முருகன், ஜாக்டோ ஜியோ சி.முருகன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் அ.அருண்பாட்சா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத்தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட குற்ற பிறப்பாணைகள் மற்றும் பிற நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மாநிலத் தலை வர் சுப்பிரமணி ஓய்வு பெறும் நாளில், அவரது பணியிட நீக்க உத்தரவை ரத்து செய்து, முறையாக ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய மாவட்டத் தலைவ ராக ஆர்.ஜோதிசங்கர், செயலாளராக மு.பாஸ்கரன், பொருளாளராக பா.வேங்கட வரதன் தேர்வு செய்யப்பட்ட னர். செ.முரளி நன்றி கூறினார்.