தி.மலை,செப்.14- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசுப் பேருந்துகளில் ஏற்ற மறுத்து அவமதித்ததைக் கண்டித்து, அரசுப் போக்கு வரத்துப் பணிமனை முன் மாற்றுத் திறனாளிகள் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுப் பேருந்து களில் மாற்றுத் திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும், ஆரணியில் அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளை நடத்து நர்கள் ஏற்ற மறுப்பது, பேருந்துகளில் அமருவ தற்கு இடம் அளிக்க மறுப்பது, இழிவாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுகுறித்து ஆரணி அரசுப் போக்குவரத்துப் பணிமனை கிளை மேலாளரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுப்பட வில்லை. இதனால், ஆவேச மடைந்த ஆரணி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கள், அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க ஆரணி தாலுகா தலை வர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கோபால ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். இதில், மாவட்டப் பொறுப்பாளர்கள் ரமேஷ்பாபு, செல்வம், சத்யா, ஜெகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பி.கண்ணன், சி.அப்பாசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவல றிந்த ஆரணி அரசுப் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளார், போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். அப்போது, இனி வரும் காலங்களில் ஆரணியில் அரசுப் பேருந்துகளில் அரசு விதிகளின்படி, மாற்றுத்திற னாளிகள் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதை ஏற்று மாற்றுத்திற னாளிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.