திருவண்ணாமலை,டிச.5- திருவண்ணாமலை மாவட்ட காவல் நண்பர்கள் குழு சார்பாக சீருடை வழங்கும் நிகழ்ச்சி டேனிஷ் மிஷன் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் காவல் நண்பர்கள் குழு மாவட்டத் தலைவர் ஏ.ஏ. ஆறுமுகம் தலைமை தாங்கி னார். பள்ளி தலைமைஆசிரியர் ஹபர்ட் தனசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அ.ஜெய்பிலிப்ஸ் சாமிதம்பி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நகர கிழக்கு காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு காவல் நண்பர்கள் குழு மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி பேசிய போது, “திருவண்ணாமலை தீபவிழா தினங்களில் மாவட்டம் முழுவதிலுமுள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல் நண் பர்கள் குழுவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாதுகாப்பு பணியாற்றிட அழைப்பு விடுத்தார்.