tamilnadu

img

பட்டா மாற்றத்தை முறைபடுத்துக: காந்தி சிலையிடம் மனு அளிப்பு

திருவண்ணாமலை, ஜுலை 9- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இந்த நிலம், அதே பகுதியைச்  சேர்ந்த சுப்பிரமணி என்ப வர் பெயருக்கு தவறுதலாக பட்டா மாறுத லாகி  உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், துரைசாமியின் மகன்  சிவராமன் என்பவர்,  தனது தாத்தா மற்றும்  தகப்பனார் காலமாகி விட்டதால், தனது பாட்டி  பெயரில் நிலப்பட்டா ஆவணத்தை திருத்தம் செய்து தரும்படி,  கடந்த 3மாதத்திற்கு முன்பு  வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்து, நடவடிக்கை மேற்கொள்ளும் படி முறையிட்டுள்ளார். ஆனால் வட்டாட்சியரும், மாவட்ட நிர்வா கமும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் உள்ள தேசத்தந்தை மகாத்மாகாந்தி உருவ சிலையிடம் தனது மனுவை வழங்கி னார். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலு வலகத்தில் இருந்த பொதுமக்களிடம் இந்த கோரிக்கை மனுவை துண்டுப் பிரசுரமாக வழங்கினார்.