tamilnadu

img

தரமற்ற சாலை: நகராட்சி அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை, ஜூலை 29- திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகே அமைக்கப்படும் தரமற்ற சாலைப்  பணிகளை நிறுத்தவேண்டும் என பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அந்த தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, அவலூர்பேட்டை சாலை, ரயில்வே கேட் வரையிலுமான சாலை  சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அங்கு சிமெண்ட் சாலை உள்ளது.  சிமெண்ட சாலையை ஒட்டி 10 அடி அக லத்தில் மண்தரை பரப்பு உள்ளது. அந்த சிமெண்ட் சாலை மற்றும் மண்தரை பரப்பை  கிளறி, கெட்டிப்படுத்திய பின்னரே, அப்பகுதி யில் புதிய சாலை அமைக்க வேண்டும். ஆனால் மண்தரையின் மீதே புதிய சாலை  அமைப்பதால், விரைவில் சாலை சேதமடை யும் என அப்பகுதி மக்கள்  தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  நிர்வாகிகள், புதிதாக அமைக்கப்  படும் சாலையை பார்வையிட்டனர்.

பின்னர் அந்த சாலை அமைக்கப்படும் விவரம் குறித்த தகவலை கேட்டு நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால் மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி நிர்வா கம் ஒரு மாத காலமாகியும் அதுகுறித்து தக வல் அளிக்கவில்லை. இந்நிலையில் செவ்வாயன்று மீண்டும் இதுகுறித்து சிபிஎம் நிர்வாகிகள் நகராட்சி பொறியாளரிடம் தகவல் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தகவல் அளிக்க மறுத்ததுடன்,  அலட்சியமாகவும் பதில் அளித்துள்ளார். இதையடுத்து சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எம்.சிவக்குமார் தலைமையில், நகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை யினர் நகராட்சி அலுவலர்களிடம் பேசியதை தொடர்ந்து, அந்த சாலை குறித்த தகவல் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ், டி.கே.வெங்கடேசன், நகரச்  செயலாளர் எம்.ரவி, வழக்கறிஞர் எஸ்.அபி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.