தி.மலையில் தொற்று 493
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது.
வாலிபர் கொலை
விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டகுப்பத்தில் புதுவையை ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (40) என்பவர் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கோட்டக்குப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் தொற்று 40ஆக உயர்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
சாலையில் காலாவதியான சாக்லேட்டுகள்
கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கம் அருகே சில மொத்த விற்பனையாளர்கள் மிட்டாய்கள், சாக்லேட்டுகள், லாலிபாப், பிஸ்கட்டுகள் போன்ற காலாவதியான இனிப்பு வகைகளை கொட்டி சென்றுள்ளனர். இதை சிறுவர்கள் தெரியாமல் உட்கொண்டால் நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், கொட்டிச் சென்றவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.