திருவண்ணாமலை, பிப்.20- நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் திரு வண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் லட்சுமி திருமண மண்டபத்தில் கோரிக்கை மாநாடு புத னன்று (பிப்.20)நடை பெற்றது. இந்த கோரிக்கை மாநாட்டிற்கு எஸ்.பலரா மன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கையில், ‘அரசியல் கட்சி கள், விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து போராடி னால், அடுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, இந்த திட்டத்தை நிறைவடையச் செய்ய முடியும்’ என்றார். இந்த கோரிக்கை மாநாட்டில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், வி.சுப்பிர மணி, டி.கே.வெங்கடேசன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எம்.சிவக்குமார், நிர்வாகி கள் எம்.பிரகலநாதன், வழக்கறிஞர் அபிராமன், ஆனந்தன், வாசகி, ராம தாஸ், வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கை மாநாட்டில், உழவன் உரிமை புத்தகத்திற்காக 110 சந்தாக்கள் விவசாயிகள் சங்க மாநில பொதுச் செய லாளரிடம் வழங்கப்பட்டது.