tamilnadu

img

பராமரிப்பில்லாத மாணவர் விடுதி செங்கத்தில் பயிற்சி ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை,செப்.8- திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு மாணவர்கள் விடுதிகளில் பயிற்சி ஆட்சியர் அனந்த் குமார் ஆய்வு மேற்கொண்டார். செங்கம் பகுதியில் உள்ள அரசு மாணவர், மாணவிகள் விடுதிகளில் மாணவர்கள் குறைவாக உள்ளதாக வும், இரவு வேளையில் விடுதியில் தங்காமல் மாணவர்களும், விடுதி காப்பாளரும் வீடுகளுக்குச் செல்வாத கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட பயிற்சி ஆட்சியர் அனந்த் குமார், செங்கம் மேல்பாளையம் பகுதி யில் உள்ள அரசு மாணவர் விடுதி, தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் உள்ள மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். செங்கம் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமபுறங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்றுவரு கின்றனர். இதில் அதிக தூரத்தில், பேருந்து வசதி இல்லாத நிலையில் வீட்டிற்கு சென்றுவரமுடியாத மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி பயில்கின்றனர். இந்த ஆண்டு ஆண்கள் விடுதியில் 50 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் விடுதியில் சேர்ந்த மாணவர்க ளுக்கு, ஒருவேளை மட்டுமே உணவு சமைக்கப்பட்டுள்ளது. மேலும் போதுமான பராமரிப்பு இல்லாததால் மாணவர்கள் விடுதிக்க வருவதை தவிர்த்துள்ளனர். இந்நிலையில் பயிற்சி ஆட்சியர் ஆய்வின் போது, மாணவிகள் விடுதி யில் விடுதிக் காப்பாளர் விடுமுறையில் இருந்ததால், அங்கு பதிவேடுகளை ஆய்வு செய்ய முடியவில்லை. மாணவர்கள் விடுதியில் பதிவேடு களை ஆய்வு செய்த போது, பதிவேடு களில் உள்ளதைவிட குறைவான மாணவர்களே விடுதிக்கு வருவதும், அங்கு உணவு முறைப்படி தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படுவ தில்லை என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட விடுதிக் காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பயிற்சி ஆட்சியர் அனந்த் குமார் தெரிவித்தார். கிராமத்தில் உள்ள பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள், பாதுகாப்புடன் விடுதியில் இருப்பதாக எண்ணி அச்சமின்றி உள்ளனர். ஆனால், விடுதி காப்பாளர்களின் அலட்சியத்தால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், அச்சத்துடன் தங்கி படித்து வரும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், மாணவ, மாணவியருக்கு, தரமான உணவும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.