திருவண்ணாமலை, ஜூன் 3- திருவண்ணாமலை மாவட் டம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த பெண் மற்றும் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியான தால் பிரசவ அறுவை சிகிச்சை அரங்கம் மூடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்யாறு அடுத்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதை யடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் பிரசவித்த பெண் மற்றும் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அறுவை சிகிச்சைப் பிரிவில் உள்ள 20 பேருக்கும் மேற்பட்ட பிரசவித்த பெண்கள் மற்றும் குழந்தைகளை வேறொரு கட்டிடத்திற்கு மாற்றி யுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட 4 மருத்துவர்கள், 6 உதவியாளர்களை தனிமைப்ப டுத்தி அவர்களுக்கும் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.