திருவண்ணாமலை, ஆக. 5- திருவண்ணாமலை மாவட்டம் செங் கம் அடுத்த சின்னகாயம்பட்டு கிரா மத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் செங்கத்தி லிருந்து சென்னசமுத்திரம் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு பாலம் அமைக்கும் இடத்தில் விபத்து ஏற் பட்டுள்ளது. இதில் பலத்த காய மடைந்த முருகனை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு அவசர சிகிச்சைக் காக செங்கம் அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனையில் முருகனை அனுமதித்த னர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முருகன் உடலைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பிய உற வினர்கள், சென்னசமுத்திரம் சாலை யில் பாலம் அமைக்கும் பணியினை மேற்கொள்ளும் அரசு ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என வலி யுறுத்தி திடீரென செங்கம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.