திருவண்ணாமலை, ஆக. 14- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16ஆவது மாநில மாநாடு திரு நெல்வேலியில் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது. அதையொட்டி திருவண்ணாமலையி லிருந்து தோழர் தி.ஜானகிராமன் நினைவு கொடி பயணம் வேங்கிக்கால் மின் நிலையம் அருகில் இருந்து துவங்கியது. நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர் எம்.பாலாஜி தலைமை தாங்கினார். கொடி பயணத்தை துவக்கி வைத்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன் உரையாற்றினார். நிர்வாகிகள் ஆர்.சிவராஜ், இரா.பாரி, எம்.ரவி, கமலக்கண்ணன், விவசாய தொழிலா ளர் சங்கத்தின் நிர்வாகி பிரகலநாதன், ராம தாஸ் (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர்கள் டி.பழனிவேல், கே.காங்கேயன் ஆகியோர் தலைமையில் புறப்பட்ட கொடி பயணக் குழுவில் மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி, கள்ளக் குறிச்சி வட்டத் தலைவர் கே.விஜயகுமார், வட்டச் செயலாளர் கே.சீனிவாசன், விழுப் புரம் வட்டச் செயலாளர் ஆர்.சேகர், கடலூர் வட்டச் செயலாளர் என்.தேசிங்கு உள்ளிடோர் பங்குபெற்றுள்ளனர். வட்டப் பொருளாளர் வி.எம்.வெங்கடேசன் நன்றி கூறினார்.