tamilnadu

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பேர் கைது

 திருவண்ணாமலை, மார்ச் 12- திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி.சக்கரவர்த்திக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை  தலைமை யில் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தசாமி, உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் காவல்துறையினர் செங்கம் சாலையில் உள்ள சோழா ஹோட்டலில் சோதனை செய்தனர். அப்போது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, திருவண்ணாமலை கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த, சஞ்சய் (40), தர்மபுரி மாவட்டம், அரூர் ஜெகன் (26), பவித்திரம் கிராமம், மேட்டுத் தெருவை சேர்ந்த, பிரபாகர் (24), கள்ளக்குறிச்சி மாவட்டம், செல்லம்பட்டு பூட்டை கிராமம் சக்திராஜா, திருவண்ணாமலை கோபுரத்தெரு கருப்பையா மகன் ராமலிங்கம் (38)  ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.  மேலும் இதில் பாதிக்கப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

;