tamilnadu

img

திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்கம் போராட்டம்

திருப்பூர், செப். 18 – விவசாயிகளின் வாழ்வாதார உரிமையைப் பறிக்க வகை செய்யும் வெள்ளையர் ஆட்சிக் கால தந்திச்  சட்டத்தின் நகலை எரிக்கும்  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி கள் சங்க கூட்டமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர். மத்திய அரசின் பவர்கிரிட் நிறு வனம், தமிழ்நாடு மின் தொடரமைப் புக் கழகம் இணைந்து விவசாய விளை நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் ஏராளமான திட்டங் களைச் செயல்படுத்த முயன்று வரு கின்றனர். தங்கள் சொந்த நிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த விவ சாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதைப் புறக்கணித்து விட்டு காவல்  துறையின் உதவியுடன் மின்கோபு ரங்களுக்கு நில அளவீடு செய்வது, மின் கோபுரங்கள் அமைப்பது என அத்துமீறி அராஜக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட 1885ஆம் ஆண்டு இந்திய தந்திச் சட்டத்தை பயன்படுத்தி இந்த நாசகர வேலைகளைச் செய்ய முயல்கின்றனர். இதை எதிர்த்து கடந்த  மூன்று ஆண்டு காலமாக திருப்பூர், கோவை உள்பட 10 மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விளைநிலத்தை யும் நாசமாக்கும் 1885 மற்றும் 1894ஆம் ஆண்டுகளில் நிறைவேற் றப்பட்ட இந்திய தந்திச் சட்டத்தைக் கைவிட வேண்டும், விவசாயிகள் நில உரிமையைப் பாதுகாக்கும் வகை யில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண் டும், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் மின்கோபுரங்களுக் கும், கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும், புதிதாக செயல்படுத்தும் மின் திட்டங்களை புதைவடமாக (கேபிள்) கொண்டு செல்ல வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட பொய்  வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்  என வலியுறுத்தி 10 மாவட்டங்க ளில் புதன்கிழமை மாவட்ட ஆட்சிய ரகங்கள் முன்பாக தந்திச் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட் டது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக உயர்  மின்கோபுரங்களுக்கு எதிரான விவ சாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் புதன்கிழமையன்று சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியம், திருப்பூர் மாவட் டச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் தலைமை ஏற்றனர். கோரிக்கை முழக்கம் எழுப்பியபடி ராமசாமி முத்தம் மாள் மண்டபம் அருகில் இருந்து மாவட்ட ஆட்சியரகம் நோக்கிச் சென் றனர். ஆட்சியரக நுழைவாயில் முன்பாக காவல் துறையினர் அவர் களைத் தடுத்து நிறுத்தினர். அங்கு  முழக்கங்கள் எழுப்பியபடி விவசாயி கள் 1885ஆம் ஆண்டு இந்திய தந்திச் சட்ட நகல்களை தீயிட்டு எரித்தனர். அப்போது அங்கிருந்த காவல் துறை யினர் ஓடி வந்து தந்திச் சட்ட நகல் களைப் பறித்ததுடன், தீயிடப்பட்ட நகல்களில் தீயை அணைத்தனர். இததைத்தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட விவசாயிகள், விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக் கும் மேற்பட்டோரை காவல் துறை யினர் கைது செய்தனர்.

கோவை
இதேபோல் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடை பெற்றது. திமுக முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி, விவசாயி கள் சங்க தலைவர் டாக்டர் தங்கராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மதுசூதனன், வி.ஆர்.பழனிச்சாமி, வி.பி.இளங்கோவன், விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.  முன்னதாக மத்திய, மாநில அரசு களை கண்டித்து போராட்டக்காரர் கள் சட்ட நகலை எரிக்க முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் விவசாயிகளிடமிருந்து சட்ட நகலை பறிக்க முயன்றனர். ஆனால் விவசாயி கள் சட்டநகலை கிழித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக் கும் மேற்பட்டோரை காவல்துறையி னர் கைது செய்தனர்.  இது குறித்து விவசாயச் சங்கங்க ளின் கூட்டமைப்பினர் கூறுகையில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் போடப் பட்ட காலாவதியான சட்டத்தை வைத்துக் கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகி றது. விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதைத் தவிர்த்து கேரளா மாநிலத்தைப் போல் புதை வழித்தடம் மூலமாக கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தனர். மேலும், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்க  நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய்  வழக்கை வாபஸ் பெற்று சிறையில்  அடைக்கப்பட்டவர்களை உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் எங்களது போராட் டங்களை தீவிரப்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி தலைமையில் தந்தி சட்ட நகலெரிப்பு போராட்டம் நடை பெற்றது. இதில், தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநில துணைத் தலை வர் பி.டில்லிபாபு, மாவட்டத் தலை வர் எ.பொன்னுசாமி, மாவட்ட பொரு ளாளர் எ.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் பி.தங்கவேலு மற்றும் கூட்டு இயக்க நிர்வாகி முத்து சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க  சங்ககிரி செயலாளர் ஆர்.ராஜேந்தி ரன், சுரேஷ் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு தந்தி சட்ட நகலை எரித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோடு மோகன்குமாரமங்கலம் வீதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து  விவசாயிகள் ஊர்வலமாக வந்து, ஆட்சியர் அலுவலகம் அருகே தந்தி சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக காவல் துறையினர் ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள சிபிஎம் அலு வலக நுழைவாயிலில் விவசாயி களை ஒன்று சேர விடாமல் மிரட் டும் தோரணையில் தடுத்து நிறுத்தி னர். இந்நிலையில் அதனை மீறி மோகன் குமாரமங்கலம் சாலையில் பேரணியாக விவசாயிகள் வந்து தந்தி சட்ட நகலை சாலையில் தீயட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில துணைத் தலை வர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித் தார். மாநில துணைத் தலைவர் கே.முகமது அலி, தற்சார்பு விவசாயி கள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன், எம்.நாச்சிமுத்து, ப.லலிதா, ஜெகநாதன், கே.எம்.விஜய குமார், முத்து பழனிசாமி, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ப.முகமது லுக்ம னுல், ஹசிம், மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் வி.பி.குணசேகரன், எஸ்.பொன்னுசாமி, பூபதி, சிவசுப்பிர மணி, பி.பி.ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தருமபுரி
இதேபோல், உயர்மின் கோபுரங்க ளுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தந்தி சட்ட நக லெரிப்பு போராட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநிலத் துணைத்தலைவர் டி.ரவீந்தி ரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட் டச் செயலாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எஸ்.சின்னராஜ், டி.தீர்த்தகிரி, அன்பு மற் றும் அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் சோ.அருச்சுணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்டச்செய லாளர் எஸ்.கிரைஸாமேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டசெயற்குழு உறுப்பினர் வி.மாதன், நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர்கள் நல்லம்பள்ளி கே.குப்புசாமி, பாப்பாரப்பட்டி ஆர்.சின்னசாமி ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இந்த தந்தி சட்ட நகலெரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோரை  காவல்துறையினர் கைது செய்தனர்.