திருவண்ணாமலை,மே 21-திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலையோர சிறு வியாபாரி களை பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. சாலையோர சிறுகடை வியாபார தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-திருவண்ணாமலை நகராட்சி மூலமாக பயோமெட்ரிக் அடையாள அட்டை பெற்று, அதன் அடிப்படையில் சாலையோரங்களில் கடை வைத்து வாழ்ந்து வருகிறோம். கடந்த சில நாட்களாக காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் எங்களது கடைகளை அப்புறப்படுத்துகின்றனர். மேலும் நாங் கள் உபயோகிக்கும் பொருட்களை தூக்கி எறிகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது பொருட் களை சேதப்படுத்தி மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.