tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களுக்கு வெட்டு: தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டனம்

திருவண்ணாமலை,அக்.15- டாஸ்மாக் ஊழியர்களை கத்தியால் வெட்டி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு  பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்  பட்டு வருகிறது. சனிக்கிழமை இரவு கடையை  மூடிவிட்டு, மேற்பார்வையாளர் முத்துக் குமார் மற்றும்  விற்பனையாளர் செல்வ ராஜி ஆகியோர் வெளியில் வந்தபோது,  அடை யாளம் தெரியாத நபர்கள் முகத்தில் துணி  கட்டிக்கொண்டு கையில் கத்தியுடன், வந்த கொள்ளையர்கள் மேற்பார்வையாளர் முத்துக்குமாரின் இரண்டு கைகளையும் வெட்டி விட்டு விற்பனைத் தொகை  1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். படுகாயமடைந்த முத்துக் குமார் திருவண்ணாமலை அரசு மருத்து மனையிலும் பின்னர் சென்னை அரசு மருத்து வமனையிலும் சிகிச்சைக்காக அனு மதித்துள்ளனர்.  இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்ற வாளிகளை கைது செய்து தக்க நடவடிக்கை  எடுக்கக் கோரி, அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு, ரா.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தொமுச  மாநில பேரவை பொதுச் செயலாளர் க. சௌந்தரராசன், மகாதேவன், சிஐடியு இரா. பாரி, எம்.ரவி, எம்.வீரபத்திரன், இ க.மோகன்,  ஏஐடியுசி நாராயணன், பச்சையப்பன்,  பாதொச குமரேசன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.