tamilnadu

img

கொரோனாவுக்கு ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் முத்து விநாயகர் கோயில் தெருவில் ஒரே குடும்பத்தில் உள்ள எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதில் கடந்த 2ஆம் தேதி அருள் வேந்தன் உயிரிழந்தார். அருள் வேந்தனின் மாமனார் தேவநேசன் (ஆக.12 ) பலியானார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவரது மகன் மகீபனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த பத்து நாள்களில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்கள் தவிர அந்தக் குடும்பத்தில் ஐந்து பெண்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளார். மீதமுள்ள நான்கு பேர் திருவண்ணாமலை ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனித நேயம்...
மகீபன் கிறிஸ்தவர் என்பதால் நாசர் உசேன் தலைமையிலான 10 பேர் கொண்ட இஸ்லாமிய சகோதரர்கள் கிருத்துவ முறைப்படி மகீபனின் உடலை திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள கல்லறையில் அடக்கம் செய்தனர்.

;