tamilnadu

img

கொரோனா பாதிப்பு....திருவண்ணாமலையில் ஒருவர் பலி

திருவண்ணாமலை
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கொரோனா ஜெட் வேகத்தில் உள்ளது.  குறிப்பாக கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த 600-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், திருவண்ணாமலையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.  

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. எனினும் திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு குறைவு தான். அங்கு இதுவரை 25 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.   

;