திருவண்ணாமலை, ஜூலை 21- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே செல்போன் விற்பதாக கூறி விபாரிகளிடம் 1.5 கோடி மோசடி செய்த வரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வரு கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் சுதாகர்(34). இவர் ஆரணி, ராட்டிண மங்கலத்தில் செயல்படும் தனியார் செல்போன் நிறுவனத்தில், மேலாளராக பணி புரிந்து வந்தார். ஆரணி, போளூர், வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல் போன் மற்றும் சிம் கார்டு விற்பனை செய்து வந்தார். அப்போது அப்பகுதி வியாபாரி களை தொடர்பு கொண்டு சலுகை விலையில் செல்போன் விற்ப னைக்கு வந்திருப்பதாகவும், செல்போனுடன் இலவசமாக ஹெல்மெட் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதன்படி, வந்தவாசியை சேர்ந்த செல்போன் விற்பனை யாளர் சீனிவாசன், சுதாகரிடம் செல்போன் வாங்க கடந்த ஏப்ரல் மாதம் சுதாகர் மற்றும் அவரது நண்பரின் வங்கிக் கணக்கில் ரூ.13 லட்சத்தை முன்பணமாக செலுத்தியுள்ளார். இதேபோல் ஆரணியை சேர்ந்த ரமேஷ், மோகன் குமார், செய்யாறு மகேஷ், போளூர் செல்வ கணபதி, திருவண்ணா மலை குமரன், சேத்துப்பட்டு பழனிச்சாமி ஆகியோர் மொத்தம் 1.5 கோடி ரூபாய் பணத்தை சுதாகரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், ஹெல்மெட் சலுகையுடன் செல்போன் வழங்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட செல்போன் கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது, சுதாகர் தற்போது செல்போன் கம் பெனியில் பணியில் இல்லாததும், செல்போன் விற்பதாக திட்டமிட்டு ஏமாற்றி யதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து சீனிவாசன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சிபிச் சக்ரவர்த்தியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.