tamilnadu

மீண்டும் கருக்கலைப்பு: திருவண்ணாமலையில் தீவிர விசாரணை

திருவண்ணாமலை, மே 29-திருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவ தம்பதியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத் தில் கடந்த ஆண்டு சட்டவிரோ தமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக கிடைத்த புகாரின்பேரில் சென்னையிலிருந்த வந்த மருத்துவப் பணிகள் குழுவினர் பல்வேறு ஸ்கேன் மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சோதனை செய்தனர். இதில் சில ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். கருக்கலைப்பு செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டிருந்தது.இந்த நிலையில், திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக கருக் கலைப்பு செயலில் ஈடுபட்ட போலி மருத்துவ தம்பதிகள் போலீசாரின் பிடியில் சிக்கினர். கிருஷ்ணாநகர் காருண்யா தெருவை சேர்ந்தவர் பிரபு (45). இவர் போளூர் சாலையில் மருந்துக்கடை வைத்து உள்ளார். இவரது மனைவி கவிதா (41). பிரபுவும், அவரது மனைவி கவிதாவும் சேர்ந்து மருந்துக்கடையில் வைத்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் திருவண் ணாமலை ஈசானியலிங்கம் கோவில் அருகே உள்ள கட்டிடத்தில் மருந்துக்கடையுடன் பேன்சி ஸ்டோர்  நடத்தி வந்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் போல் மருத்துவம் பார்த்ததும் பேன்சி ஸ்டோரி லேயே, சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்ததும் கண்டறியப்பட்டது.பிரபு பி.ஏ. மட்டுமே படித்து உள்ளதும், கவிதா 10 ஆம் வகுப்பு வரை படித்ததும் அவர்கள் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் போலி மருத்துவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப் பட்டது.  கடலாடியை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் திடீரென அவர் சிகிச்சை பெறுவதை நிறுத்தியுள்ளார். சுகாதார துறையினர் விசாரித்தபோது அவர் கருகலைப்பு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்ததோடு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், சட்டவிரோத கருக் கலைப்பு மையத்தை ஆட்சியர் க.சு. கந்தசாமியும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேங்கிக்கால் பகுதியில் கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த, போலி மருத்துவர் ஆனந்தி மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப் பட்டு வந்தது. அதை யடுத்து கருக் கலைப்பு செய்த அரசு மருத்துவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  இந்நிலையில் தற்போது, மீண்டும் கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள் ளது மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதன் அன்றும், திருவண்ணாமலை நகரில் உள்ள ஸ்கேன் சென்டர்களில், போலீசாரும், மருத்துவ குழுவினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.