tamilnadu

img

அரசு வேலை வாங்கித் தருவதாக 7 லட்ச ரூபாய் மோசடி

திருவண்ணாமலை, பிப்.17- திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு வட்டம் இளையாங்கண்ணி கிரா மத்தில் உள்ள பவுல் ஆரோக்கியராஜ் என்ப வர் அரசு வேலை பெறுவதற்காக வேலூர் எச்எம்எஸ் தொழிற்சங்க நிர்வாகி,திருப்பதி, மற்றும் பரமனந்தலை சேர்ந்த ஜோதி ஆகி யோரிடம் 7 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் கொடுத்து எமாந்துள்ளதாக புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள தாவது, 2014ஆம் ஆண்டு பவுல் ஆரோக்கிய ராஜின் மனைவிக்கு வேலை வாங்கித் தரு வதாகக் கூறி செங்கம் வட்டம் பரமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் வேலூ ரில் உள்ள சங்கரன்பாளையத்தில் வசிக்கும் எச்எம் எஸ் தொழிற்சங்க நிர்வாகி, திருப்பதி ஆகியோரிடம் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் இதுநாள் வரை அவரது மனைவிக்கு வேலையும் பெற்று தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் அலைக் கழித்து வருவதாக தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார். திருப்பதி மற்றும் ஜோதி ஆகிய இரு வருக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு  கொண்டு கேட்டால் பல்வேறு ஊர்களில் இருப்பதாகவும் பணத்தை திருப்பித் தரமுடியாது என்றும் கூறுவதாகவும், ஏற்க னவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதல மைச்சரின் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் புகார் தெரிவித்துள்ளார். இருப்பினும் திருப்பதி மற்றும் ஜோதி  ஆகிய இவர்கள் காவல்துறை விசாரணைக்கு  வர முடியாது, நாங்கள் நீதிமன்றத்தில் எங்கள்  மேல் உள்ள புகாரை சந்தித்துக் கொள்கி றோம் என்று ஆணவத்துடன் கூறுவதாக தெரிவித்துள்ளார்.  மேலும், தன்னைப்போலவே, பெருங் குளத்தூர் பகுதியில் வசிக்கும் கபிலன் அர்ஜு னன் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் ஆகியோரும் வேலைக் காக, திருப்பதியிடம் பணம் கொடுத்து ஏமார்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தற்போது, 7 லட்ச  ரூபாயை கொடுத்துவிட்டு மாதாமாதம் வட்டி  கட்டி வருகிறேன். என்னைப்போல் திருப்பதி  மற்றும் ஜோதி இவர்களிடம் பலரும் வேலைக்  காக பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டு இருக்கலாம். எனவே இவர்கள் மீது தகுந்த நட வடிக்கை எடுத்து 7 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுத் தரக்கோரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த மனுவில்  தெரிவித்துள்ளனர்.