tamilnadu

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலையில் “விடுதலையை நோக்கி அணிதிரள்வோம்” என்ற தலைப்பில் தலைவர் எம்.ரவி தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.செல்வன், பொருளாளர் எஸ்.ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், மூத்த தோழர் எம்.வீரபத்திரன், துணைத் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.