tamilnadu

தீப விழாவில் ரூ.2.25 கோடி  உண்டியல் வசூல்

 திருவண்ணாமலை,டிச.19- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கடந்த 1 ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெற்ற தீபவிழாவில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவையொட்டி கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் வைக்கப்பட்ட அனைத்து உண்டியல்களும் காணிக்கைகளை கணக்கிடும் பணியில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் 2 கோடியே 25 லட்சத்து 62 ஆயிரத்து 155 ரூபாய் ரொக்கப் பணமும், 292 கிராம் தங்கம், மற்றும் 2 கிலோ 684 கிராம் வெள்ளியும் வசூலானதாக ஆலய அதிகாரிகள் தெரிவித்தனர்.