tamilnadu

img

திருவண்ணாமலை: மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றதில் 2 பேர் பலி  

திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றபோது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சரண்ராஜ். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலைக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இதையடுத்து நேற்று இரவு சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய ஏழுமலை முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி ஏழுமலை உயிரிழந்தார்.

அதனைதொடர்ந்து சரண்ராஜை காப்பாற்ற முயன்ற ரேணுகோபால் என்பவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலப்பாக்கம் போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   மேலும் கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், சரண்ராஜ் மீதான முன்விரோதத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும், காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்ததாக தெரிய வந்தது.

;