tamilnadu

மின்கம்பத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

திருப்பூர், பிப். 19 – திருப்பூர் பல்லடம்  அருகே வலையபாளையம் பகுதி யில் மின்கம்பத்தில் ஏறி அங்கிருந்து கீழே குதித்து இளை ஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியைச் சேர்ந்த மணி (27) என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தில் வலையபாளையம் சாலையில் வந்து  கொண்டிருந்தார். திடீரென சாலையோரம் தனது இருசக் கர வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையோரம் மின் கம்பத் தில் ஏறி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணையில் தெரியவந்ததாக கூறியுள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.