tamilnadu

img

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருப்பூர், செப். 8- தாராபுரத்தில் பதி னான்கு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்  போக்சோ சட்டத்தில்  கைது செய்யப்பட்டார்.  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பொட்டிக் காம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவர் செப்.1ஆம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

;