tamilnadu

img

உ.பி-யில் இளம்பெண் பாலியல் வன்கொலை: திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 2- உ.பி-யில் இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப் பட்டதைக் கண்டித்து  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளியன்று பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டன.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும்,  குற்ற வாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் வெள்ளியன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தெற்கு மாநகர தலைவர் பி.பாலன் தலைமை வகித் தார். இதில், தீ.ஒ.மு. மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ஒன் றிய செயலாளர் சண்முகம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் ராசு,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரா தேவி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஞானசேக ரன், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் சமச்சீர் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.