உடுமலை, மார்ச் 9- உடுமலை, அவிநாசியில் சர்வ தேச மகளிர் தின விழா கொண் டாடப்பட்டது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் இரண்டின் வாசகர் வட்டம் கம்பள விருட்சம் அறக்கட்டளையுடன் இணைந்து உலக மகளிர் தின விழா நடத்தப்பட்டது. 2 ஆம் ஆண்டாக மகாத்மா காந்தி உண்டு உறை விடப் பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்ட தலைவர் இ.இளமுருகு தலைமை வகித்தார். விழாவில் உடுமலை பகுதியில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற மகளிர் 35 பேர் தேர்வு செய்யப்பட்டு வாழ்த்து தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன. உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் மற் றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.செல்வதீபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். இதில் வழக்கறிஞர் சத்திய வாணி, உடுமலையின் முதல் ஆட்டோ ஓட்டுநரான கவிதா, ஜிவிஜி வரலாற்று துறை உதவி பேராசிரியர் முனைவர் கற்பக வள்ளி, திருவனந்தபுரம் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் பிரி சில்லா, அரசுப் பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சண்முகப்பிரியா, வள்ளி மயில் மற்றும் சுய உதவிக்குழு அமைப்பாளர்கள் தங்கள் அனு பவங்களைப் பகிர்ந்து கொண்ட னர். நிகழ்ச்சிகளை பாரதியார் நூற் றாண்டு பெண்கள் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜய லட்சுமி தொகுத்து வழங்கினார். வாசகர் வட்ட துணை தலைவர் வி.கே.சிவக்குமார், ஆலோசகர் எம்.பி.அய்யப்பன், பேராசிரியர் கண்டிமுத்து, சிகரம் அறக்கட் டளை நிர்வாகிகள், நூலகர்கள் மகேந்திரன், பிரமோத், அருள் மொழி, செல்வராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக நூலகர் வீ.கணேசன் நன்றி கூறினார்.
அவிநாசி
அவிநாசியில் அரசு கலைக் கல்லூரி மாணவியர், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்பினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதில், பாலின சமத்துவம், மனித உரிமை மீறல் குறித்தான விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய பதாகைகளுடன் அரசு கலைக்கல்லூரியில் தொடங் கிய பேரணி புதிய பேருந்து நிலை யம் வரை நடைபெற்றது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகி தேவி, அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஹேம லதா, முதல்வர் குணசேகரன், வட் டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.