திருப்பூர், ஜன.28- திருப்பூரில் பெண்கள் தாலி கொடியுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம், செம்மிபா ளையம் பகுதிகளில் பவர் கிரிட் நிறுவனம் எடுத்துக்கொண்ட விவசாய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்தும், மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தபடி முதல் கட்ட இழப்பீட்டு வழங்குவதுடன் கூடுதல் இழப்பீடு கேட்டும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் உரிய இழப்பீடு வழங்க வில்லை என்றால் பெண்கள் தாலிக் கொடியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்ப டைத்து செல்வதாக கூறி தாலிக்கொடியு டன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இத னால் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் பரபரப்பு ஏற்பட்டது