முகாமில் பங்கேற்க என்னென்ன தேவை?
மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல், சாதிச்சான்று நகல், கல்லூரி அடையாள அட்டை, கல்விக்கட்டண விபரம், கல்லூரி கலந்தாய்வு கடித நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், பான் அட்டை நகல், ஆண்டு வருமானச்சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் வர வேண்டும். பெற்றோர்களின் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் அவர்களின் இரு புகைப்படங்களும் தேவை என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசின் www.vidyalakshmi.co.in என்ற கல்விக்கடன் தொடர்பான இணையதளத்தில் பதிவு செய்து வங்கிகளில் எளிதில் கல்விக்கடன் பெறலாம். முகாமில் பங்கேற்போர் இந்த இணையதளத்தில் பதிவு செய்த நகலுடன் வரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி தொடர்பு எண்: 0421 2971185.
திருப்பூர், நவ. 3 - திருப்பூர் மாவட்ட திஷா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாணவர்களுக்கு தேவையான அளவு கல்விக்கடன் வழங் காதது குறித்து கேள்வி எழுப்பி, உடனடியாக கல்விக் கடன் முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து வரும் நவ. 9, 10 ஆகிய இரு நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன், ஈரோடு எம்.பி. அ.கணேசமூர்த்தி, பொள்ளாச்சி எம்.பி. எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோரும், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., திருப்பூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முன்வைக்கப்பட்ட அறிக்கை யை ஆய்வு செய்து தனது கருத்துக் களைப் பதிவு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அருகாமையில் இருக்கும் கோவை மாவட்டத்தில் ஒரு மாதத்தில் ரூ.100 கோடி கல்விக் கடன் தருவதென இலக்கு நிர்ணயித்து வேலை செய்கின்றனர். நடப்பு ஆண்டு க்கு ரூ.350 கோடி கல்விக் கடன் தருவ தாக முடிவு செய்துள்ளனர். ஆனால் மிகப்பெரும் எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் முக்கிய மாவட்டமான திருப்பூரில் ரூ.15 கோடி மட்டும் இதுவரை கல்விக்கடன் கொடுத்திருப்பதாக அறிக்கை கொடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மாணவர்கள் கல்வி நலனையும், எதிர்கால நலனை யும் கருத்தில் கொண்டு விரைவில் கல்விக்கடன் முகாம் நடத்துவதுடன், கூடுதல் தொகை இலக்கு நிர்ணயித்து, கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த பின்னணியில் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 20இல் கல்விக்கடன் முகாம் நடத்தப்படு கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக மும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து நடத்தும் இம்முகாமில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் உடனடி யாக கல்விக்கடன் பெற்றுக் கொள்ள லாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.
பி.ஆர்.நடராஜன் வரவேற்பு
இந்த முகாம் நடத்தப்படுவது தொடர்பாக பி.ஆர்.நடராஜன் எம்.பி. கூறியதாவது: ஆகஸ்ட் 29ஆம் தேதி திஷா கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட த்தில் கல்விக்கடன் குறைவாக வழங்கப் பட்டிருப்பது சரியல்ல, இம்மாவட்ட மாணவர்களின் நலன் கருதி உடனடி யாக கல்விக்கடன் முகாம் நடத்தி, கூடு தல் தொகை கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் கேட்டுக் கொண்டதை ஏற்று மாவட்ட நிர்வாகம் நவ. 9, 10 தேதிகளில் கல்விக் கடன் முகாம் நடத்துவதற்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை திருப்பூர் மாவட்ட மாணவர்கள் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன். அதே சமயம் முகாமில் பங்கேற்று கல்விக்கடன் பெறு வதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் பெற்றோர், மாணவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம், என்றார்.